கேரளாவில் தொடரும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு

கேரளாவில் தொடரும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு

கேரளாவில் தொடரும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
Published on

கேரளாவில் மழை , வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95ஆக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி முதல் கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளது. 

34 பேர் காயமடைந்துள்ள நிலையில் 59 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமான முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 2 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 500 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

மீண்டும் மழை பெய்வதால் பல இடங்களில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் பூதானம் கிராமத்தில் வெள்ளம் வடியாத நிலையில், மீண்டும் கனமழை பெய்து வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com