மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்

மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்
மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்

கேரளாவில் பத்திரிகையாளர் ஒருவர் தனது மகளுக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு அந்தப் பணத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள பல்வேறு தரப்பினரும் தங்களது உதவி கரத்தை நீட்டி வருகிறார்கள். வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால் உதவி செய்யுமாறு முதலமைச்சர் பினராயி விஜயனும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்நிலையில், கேரளாவில் பத்திரிகையாளர் மனோஜ் என்பவர் கன்னூரில் தனது மகளுக்கு நடக்கவிருந்த நிச்சயத்தை ரத்து செய்துவிட்டு அந்தப் பணத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “எனது மகளின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெறுவது என்று திட்டமிடப்பட்டு இருந்தது. கேரள மாநில மிகப்பெரிய வெள்ளப் பேரிடரை சந்தித்து வருவதால் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிறோம். நிச்சயதார்த்தத்திற்கு ஆகும் செலவினை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளிப்பது என்று மாப்பிள்ளை வீட்டாருடன் சேர்ந்து முடிவு எடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com