டவ்-தே புயலால் கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம்

டவ்-தே புயலால் கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம்

டவ்-தே புயலால் கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம்
Published on

டவ்-தே புயல் காரணமாக கேரளாவின், எட்டு கடற்கரையோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் கரையை கடக்கும் வாய்ப்புள்ளது என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைக்கு பின்னர், எட்டு மாவட்டங்களுக்கு கேரள அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. டவ்-தே புயல் காரணமாக மீனவர்கள் மே 17 வரை கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

டவ்-தே புயல் 'மிகக் கடுமையான' சூறாவளி புயலாக (150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்) தீவிரமடையக்கூடும் என்றும், இதனால் தமிழ்நாடு, கேரளா, கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் பல மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com