சபரிமலை ஐயப்பன் கோயிலில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி

கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன், சபரிமலையை தூய்மைப்படுத்தும் 'புண்ணியம் பூங்காவனம்' திட்டப்படி குப்பைகள், கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

சபரிமலைக்கு கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன், நீதிபதி முரளி புருஷோத்தமன் ஆகியோர் வருகை தந்தனர். பின்னர் அவர்கள் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஐயப்பன் விக்ரகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.



தொடர்ந்து சபரிமலை சன்னிதான சுற்றுப்புறச் சுகாதாரத்தை மேம்படுத்தும் "புண்ணிய பூங்காவனம்" திட்டப்படி குப்பைகள், கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் கேரள உயர்நீதிமன்ற நீதியரசர் தேவன் ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

சன்னிதானத்தில் உள்ள புண்யம் பூங்காவனம் அலுவலகம் முன் நடந்த நிகழ்வில் நீதியரசருடன் தனி அலுவலர் ஆனந்த், உதவித் தனி அலுவலர் நிதின்ராஜ், புண்யம் பூங்காவனம் கோட்ட அலுவலர் சுமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து நீதி அரசர் சபரிமலையின் வருகை பதிவேட்டில் கையெழுத்து எட்டு தனது கருத்துக்களை பதிவு செய்தார். அவருக்கு புண்ணியம் பூங்காவனம் திட்ட விளக்க கையேடு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com