கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

இந்தியாவிலேயே கேரளாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றை கட்டுபடுத்த கேரளா அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன.

கடந்த மாதம் 27ம் தேதி முதல் தற்போது ஆகஸ்ட் 1ம் தேதி வரை ஆறுநாட்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 20,000-த்தை தாண்டியிருக்கிறது. நேற்று 1.90 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 23,676 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவை நியமித்திருந்தார்.

அதன் அடிப்படையில் நேற்று இந்த குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் கேரள முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நாளை முதல் காலை ஏழு மணி முதல் இரவு 9மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுதந்திர தினம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆகிய இரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் ஏழு நாட்களில் குறைந்தது ஆயிரம் பேரிடம் பரிசோதனை செய்து, தொற்று அதிகம் உள்ள இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com