வரதட்சணைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்: கேரள ஆளுநர் பங்கேற்பு

வரதட்சணைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்: கேரள ஆளுநர் பங்கேற்பு
வரதட்சணைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்: கேரள ஆளுநர் பங்கேற்பு

வரதட்சணைக்கு எதிராக கேரளாவில் இன்று நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆளுநர் ஆரீப் கான் கலந்து கொள்கிறார்.

கேரளாவில் சமீபத்தில் வரதட்சணை மரணங்கள் அதிகரித்த நிலையில், சில காந்திய இயக்கங்கள் சார்பில், தலைநகர் திருவனந்தபுரத்தில் வரதட்சணைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் தானும் பங்கேற்கவிருப்பதாக ஆளுநர் ஆரீப்கான் தெரிவித்துள்ளார்.

மாலை 4.30 மணி முதல், போராட்டம் முடியும் வரை ஆளுநர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com