“தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்” - கேரள அரசு அனுமதி

“தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்” - கேரள அரசு அனுமதி

“தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்” - கேரள அரசு அனுமதி
Published on

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, ஐப்பசி மாத வழிபாட்டுக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். 

அத்துடன் 10 வயதுக்கு மேலிருந்து 50 வயதுக்குள் உள்ள பெண்கள் சபரிமலை சந்நிதானத்துக்கு செல்வதை தடுக்க வழிகளான எருமேலி, பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சமாஜம் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்த, பதிலுக்கு பக்தர்களும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, சபரிமலை கோயில் விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருக்கிறது என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியிருந்தார். மேலும், சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட தயாரா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. போராட்டங்கள் வலுத்த நிலையில், கேரள அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. இதனிடையே, தேவசம் போர்டின் சமரச முடிவிற்கு கேரள இந்து அறநிலையத் துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எவ்வித பிரச்னையும் இன்றி ஐயப்பனை வணங்கி செல்ல வேண்டும் என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com