\
கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி

கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி

கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னாவுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி
Published on

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து கேரளாவிற்கு நூற்றுக்கணக்கான கிலோவில் தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக ஸ்வப்னா என்ற பெண் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டு திருச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com