அதில், நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. அதே போல், பம்பை நதியில் குளிப்பதற்கும் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் உடன் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு பின் பக்தர்கள் கோயிலில் தங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.