கேரளா: நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஆர்எஸ்எஸ் பிரமுகரின் 2 கைவிரல்கள் துண்டானது

கேரளா: நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஆர்எஸ்எஸ் பிரமுகரின் 2 கைவிரல்கள் துண்டானது
கேரளா: நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஆர்எஸ்எஸ் பிரமுகரின் 2 கைவிரல்கள் துண்டானது

கண்ணூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் இரண்டு கை விரல்கள் துண்டானது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் பிஜூ (40). கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சிபிஐ (எம்) தொண்டர் தன்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய இவர் மீது. மேலும் 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று வீட்டில் நாட்டு வெடி குண்டு தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பிஜூவின் இடது கையில் இரு விரல்கள் துண்டானது. இதைத் தொடர்ந்து, மலபார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, வெடிபொருள்கள் தயாரிப்பு தடுப்புச் சட்டத்தின்கீழ் பிஜு மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com