சைக்கிளில் ஜாலியாக சுற்றிய சிறுவனை கடித்து குதறிய நாய்.! - கேரளாவில் பயங்கரம்

சைக்கிளில் ஜாலியாக சுற்றிய சிறுவனை கடித்து குதறிய நாய்.! - கேரளாவில் பயங்கரம்
சைக்கிளில் ஜாலியாக சுற்றிய சிறுவனை கடித்து குதறிய நாய்.! - கேரளாவில் பயங்கரம்

சைக்கிளில் குழந்தைக்கு விளையாட்டு காட்டிகொண்டிருந்த சிறுவனை நாய் ஒன்று பாய்ந்து தாக்கி கடித்து குதறிய சம்பவம் கேரளா கோழிக்கோட்டில் நடந்துள்ளது.

நாய்கள் எல்லாம் செல்லப்பிராணிகள் என்று கூறி நாய்களை வளர்ப்பது அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து நாய்களால் சிறுவர்கள் பாதிப்பிற்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. முன்னதாக கேரளாவில் தெருவில் வருபவர்களை 10-15 நாய்கள் ஒன்றாக துரத்தி கடித்து குதறும் சம்பவம் வீடியோவாக வெளியாகிய நிலையில், தற்போது சைக்கிளில் வந்த சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தெருவில் குழந்தை ஒன்றுடன் சைக்கிளில் வேடிக்கை காட்டி கொண்டிருந்த சிறுவனை எதோ காத்திருந்து பழிவாங்குவது போல், திடீரென வந்த நாய் ஒன்று சிறுவன் மீது பாய்ந்து கடித்து குதறியது.

நாய் பாய்ந்ததும் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுவனை விடாமல் ஆடையுடன் கடித்து இழுத்த நாய், பின்னர் கையால் விரட்ட தள்ளிய போது கையை கவ்வியது. மேலும் கையை விடாமல் பலமாக கடித்து குதறியது.

இந்நிலையில் அருகில் இருந்த குழந்தையை வீட்டிற்குள் இருந்து வந்தவர் தூக்கிக்கொண்டதால் குழந்தை தப்பித்தது. பின்னர் நாய் பிடியிலிருந்து எப்படியோ தப்பித்த அந்த சிறுவன் அருகில் இருந்த வீட்டிற்குள் சென்று கேட்டை சாத்திகொண்ட பிறகு அந்த நாய் அங்கிருந்து ஓடிச்சென்றது.

நெஞ்சை பதைக்க வைக்கும் பயங்கரமான இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com