இந்தியா
ஊரடங்கு உத்தரவு : கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு நிறுத்தம்
ஊரடங்கு உத்தரவு : கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு நிறுத்தம்
ஊரடங்கு உத்தரவால் கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதி 6 ஆம் கட்ட அகழாய்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஒரு மாதமாக நடைபெற்ற அகழாய்வில் இரு வண்ண பானைகள், பானை ஓடுகள், பாசிகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடுகள் போன்றவை கண்டறியப்பட்டது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் கீழடி 6 ஆம் கட்ட அகழ்வாய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளளதாக தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெற்று அகழ்வாய்வு நிறுத்தப்பட்டுள்ளது.

