2 மாதங்கள் சோஷியல் மீடியா பயன்படுத்தக் கூடாது – நூதன நிபந்தனையுடன் இளைஞருக்கு ஜாமீன்

2 மாதங்கள் சோஷியல் மீடியா பயன்படுத்தக் கூடாது – நூதன நிபந்தனையுடன் இளைஞருக்கு ஜாமீன்
2 மாதங்கள் சோஷியல் மீடியா பயன்படுத்தக் கூடாது – நூதன நிபந்தனையுடன் இளைஞருக்கு ஜாமீன்

2 மாதங்களுக்கு சோஷியல் மீடியாவில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று நூதன நிபந்தனையுடன் இளைஞருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரேந்திர தியாகி என்ற இளைஞர், கடைக்காரர் ஒருவரை தாக்கியதாக கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். நான்கு பிரிவுகளின் கீழ் தியாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட தியாகி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். "நான் சென்ற ஆண்டு நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 75% மதிப்பெண்கள் பெற்றேன். வேளாண் கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வருகிறேன். கொரோனா காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

எனவே நான் தேர்வுக்கு தயாராக வேண்டும். எனக்கு ஜாமீன் வழங்கப்படாவிட்டால்,  எனது எதிர்காலம் பாழாகிவிடும்’ என்று தியாகி மனுவில் கூறினார். 

இதையடுத்து ஹரேந்திர தியாகிக்கு சில நூதன நிபந்தனைகளுடன்  ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

விண்ணப்பதாரர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற வேண்டும். எக்காரணம் கொண்டும் அவற்றை பயன்படுத்தக் கூடாது. விண்ணப்பதாரர் தான் எழுதவிருக்கும் தேர்வில் மட்டும் கவனம் செலுத்தவே இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. மேலும் ஐந்து மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வர வேண்டும்.  

நிபந்தனைகளை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தெரியவந்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும்’’ என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com