கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்

கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்

கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்
Published on

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள்
அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்தி வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ்
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை
அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கார்த்தி சிதம்பரம் தனது சொத்துக்களை விற்க முயற்சித்ததாகவும், அதனால் அவரது சொத்துகளும்,
வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com