கர்நாடகா | கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் பணியாற்றும் இளம் பெண்ணிடம் பொதுவெளியில் அத்துமீறிய நபர்

கர்நாடகாவில் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் பணிபுரியும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் செருப்பால் அடிக்கும் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.
cctv footage
cctv footagept desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் விஜயப்பூர் தாலுகாவின் நாகாத்தான் கிராமத்தில் உள்ள கணினி பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணிடம், ஸ்ரீஷைலா என்ற நபர் கடந்த சில நாட்களாக அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

cctv footage
cctv footagept desk

அப்படி அவர் நேற்றும் அப்பெண்ணிடம் மீண்டும் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் அந்த இளைஞரிடம் ஷூவை காட்டியுள்ளார்.

cctv footage
“நிச்சயமாக மாற்றங்கள் ஏற்பட்டு மகத்தான கூட்டணி அமையும்” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இதனால் கோபமடைந்த ஸ்ரீஷைலா என்ற அந்த நபர், கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திலிருந்து அந்த இளம் பெண்ணை வெளியே இழுத்து வந்து செருப்பால் கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.

பலர் அவரை தடுக்க முயன்றும் அவர் தொடர்ந்து அந்த பெண்ணை தாக்கியவாறு இருந்துள்ளார். இதுகுறித்து விஜயப்பூர் ஊரக காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். இதையறிந்த ஸ்ரீஷைலா தலைமறைவாகி உள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com