"மேகதாதுவில் அணை கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" - எடியூரப்பா திட்டவட்டம்

"மேகதாதுவில் அணை கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" - எடியூரப்பா திட்டவட்டம்

"மேகதாதுவில் அணை கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" - எடியூரப்பா திட்டவட்டம்
Published on

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு நிச்சயம் செயல்படுத்தும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமாக பல்வேறு அம்சங்கள் இருப்பதாக கூறினார். மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக மக்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் அத்திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்தார். மேலும், சட்ட நடைமுறைளுக்கு உட்பட்டு மேகதாது அணை கட்டப்படும் என்றும் இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சரை நட்பு ரீதியில் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் எடியூரப்பா கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com