கர்நாடகா: சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த டேங்கர் லாரி

கர்நாடகா: சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த டேங்கர் லாரி
கர்நாடகா: சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த டேங்கர் லாரி

துமகூரு அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதிய டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் துமகூரு அருகே கூலூரு பகுதியில் நேற்றிரவு தண்ணீர் டேங்கர் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து உடனே லாரி தீப்பிடித்து எரியத் துவங்கியது. ஓட்டுநரும், கிளீனரும் லாரியில் இருந்து உடனே வெளியேறியதால் அவர்கள் இருவரும் உயிர் தப்பினர்.

இந்த தீ விபத்தில் டேங்கர் லாரி முழுவதுமாக எரிந்து நாசமானது. விபத்து தொடர்பாக துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com