பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம்: மன்னிப்பு கோரிய கர்நாடக அமைச்சர்

பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம்: மன்னிப்பு கோரிய கர்நாடக அமைச்சர்
பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம்: மன்னிப்பு கோரிய கர்நாடக அமைச்சர்

பெண்ணை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அமைச்சர் சோமண்ணா மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஹங்கலா  கிராமத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவரை அமைச்சர் சோமண்ணா கன்னத்தில் அறைந்தது தொடர்பான வீடியோ வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு  பட்டா வழங்கும் நிகழ்ச்சியில்,  தான் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும், யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி நடக்கும் போது சம்பந்தப்பட்ட பெண் பலமுறை மேடைக்கு வந்ததாகவும், நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி, அவரை தான் ஒதுங்கி நிற்க வைக்க முயற்சித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ள தனக்கு, பெண்கள் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும்  கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com