'அரிசி போதாது என்றால் நீங்கள் செத்துவிடுங்கள்' -விவசாயியிடம் கூறிய கர்நாடக அமைச்சர்

'அரிசி போதாது என்றால் நீங்கள் செத்துவிடுங்கள்' -விவசாயியிடம் கூறிய கர்நாடக அமைச்சர்
'அரிசி போதாது என்றால் நீங்கள் செத்துவிடுங்கள்' -விவசாயியிடம் கூறிய கர்நாடக அமைச்சர்

பொதுவிநியோக திட்டத்தில் அரிசியின் அளவு குறைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய விவசாயியை செத்துவிடுங்கள் என கூறி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் கர்நாடகா அமைச்சர் உமேஷ் கட்டி.

கர்நாடகா உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கட்டியுடன் விவசாயி ஒருவர் பேசும் தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியது. அதில், அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 கிலோ அரிசியை 2 கிலோவாக அரசு குறைத்துள்ளது நியாயம்தானா? என்று கேள்வி கேட்டுள்ளார்.  அதற்கு உமேஷ்கட்டி "2 கிலோ அரிசி போதாது என்றால் நீங்கள் சாவது நல்லது. அதற்கு முன்பு அரிசியை விற்பனை செய்யும் தொழிலை நிறுத்த வேண்டும். இனி எனக்கு நீங்கள் போன் செய்யக்கூடாது" என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

உமேஷ் கட்டியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உமேஷ் கட்டியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே தன்னை தூண்டிவிடும் வகையில் பேசியதாலேயே அப்படி பதில் அளித்ததாக விளக்கம் அளித்துள்ள உமேஷ் கட்டி, ஒருவர் கூட பசியால் இறக்க கூடாது என்பது தனது நிலைப்பாடு என கூறியுள்ளார். மேலும் அமைச்சர் உமேஷ் கட்டியின் பேச்சுக்கு, அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா வருத்தம் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com