கர்நாடகா: மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுத்தை - குலைத்தே விரட்டியடித்த தெருநாய்கள்

கர்நாடகா: மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுத்தை - குலைத்தே விரட்டியடித்த தெருநாய்கள்
கர்நாடகா: மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுத்தை - குலைத்தே விரட்டியடித்த தெருநாய்கள்

மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுத்தை விரட்டி அடித்த தெரு நாய்கள். சிசிடிவி காட்சிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், மைசூர் ரிசர்வ் பேங்க் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் அருகே மரத்தின் மீது சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது இதனை கவனித்த தெரு நாய்கள் சத்தமாக குலைக்க துவங்கின.

இதையடுத்து நாய்கள் குலைக்கும் சத்தத்தால் சிறுத்தை மரத்திலிருந்து கீழே குதித்து இரண்டு நாய்களை தாக்க முயற்சி செய்தது. நாய்கள் இரண்டும் சிறுத்தையை நோக்கி குலைத்துக் கொண்டே ஓடியது.

இந்நிலையில் சிறுத்தையிடம் இருந்து உயிர் தப்பிய நாய்கள் மீண்டும் ஆவேசமாக குலைக்கத் தொடங்கின. இதனால் பயந்துபோன சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்த வீடியோ காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியை கண்ட அப்பகுதி மக்கள் சிறுத்தைகள் இப்பகுதியில் அதிகமாக நடமாடுவதை பலமுறை வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டினர்.

இது போன்ற சம்பவம் இனியும் தொடராமல் இருக்க வனத ;துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com