“தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது”- நிதின் கட்கரி..!

“தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது”- நிதின் கட்கரி..!
“தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது”- நிதின் கட்கரி..!

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. 

இதனிடைய நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதேசமயம் மேகதாது அணை தொடர்பான பேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com