கர்நாடக ஆளுநரின் 2வது கெடுவிற்கு முதலமைச்சர் குமாரசாமி பதில் 

கர்நாடக ஆளுநரின் 2வது கெடுவிற்கு முதலமைச்சர் குமாரசாமி பதில் 
கர்நாடக ஆளுநரின் 2வது கெடுவிற்கு முதலமைச்சர் குமாரசாமி பதில் 

இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும் என முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், மஜத மற்றும் சுயேட்சைகள் உட்பட 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாலும், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாலும் கர்நாடக அரசு கவிழும் நிலையில் உள்ளது. நேற்றைய கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமளியால் அவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் நடைபெறவில்லை.

இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் வஜுபாய் லாலா நேற்று குமாரசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாத நிலையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு மீண்டும் கெடு விதித்துள்ளார். 

இந்நிலையில் முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் பேசினார். அப்போது, இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் விதித்த கெடுவை கடைபிடிக்க முடியாததால் வரும் விளைவில் இருந்து சபாநாயகர்கதான் என்னை காக்க வேண்டும் எனவும் ஆளுநர் அனுப்பிய கடிதம் தன்னை காயப்படுத்திவிட்டது எனவும் குமாரசாமி குறிப்பிட்டார். 

ஆளுநர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் எனவும் கர்நாடகாவில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற குதிரை பேரம் குறித்து ஆளுநருக்கு தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com