கர்நாடகாவில் 2 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அரசு தகவல்

கர்நாடகாவில் 2 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அரசு தகவல்

கர்நாடகாவில் 2 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அரசு தகவல்
Published on

2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட முதல் மாநிலமாக கர்நாடகா திகழ்கிறது என அரசின் தகவல்கள் தெரிவிக்கிறது

கோவிட்-19 வைரஸை தடுப்பதற்காக,  2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்ட நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது. இன்று பிற்பகல் 2:00 மணி நிலவரப்படி, கோவிட்-19 க்கு எதிராக 2,06,577 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 7:30 மணி வரை 28,613 மையங்களில் 16 லட்சத்தை (16,13,667) தாண்டியுள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) தற்காலிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 13,203 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, 13,298 குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்றும், 131 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாட்டில் மொத்தம் 1,84,182 கொரோனா வழக்குகள் செயலில் உள்ளன என்றும், இதுவரை மொத்தம் 1,53,470 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com