கர்நாடகா: கார் மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் பலி - திருமண நிகழ்வுக்கு சென்று திரும்பியபோது சோகம்!

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கானாபுரா தாலுகா அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
death
deathfile

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், கோலிஹள்ளியில் நடைபெற்ற திருமணம் நிகழ்ச்சிக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் அனைவரும் காரில் தார்வாட் நோக்கி திரும்பியுள்ளனர். அப்போது கார் பெல்காம் மாவட்டம் கானாபுரா தாலுகாவில் உள்ள நந்தகாட் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாடு இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Car accident
Car accidentpt desk

இதில், கார் ஓட்டுநர் ஷாருக் பெண்டாரி (30), இக்பால் ஜமாதார் (50), சானியா லங்கோட்டி (37), உமர் லங்கோட்டி (12), ஷப்னம் லங்கோடி (37), ஃபரன் லங்கோட்டி (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானாபூர் போலீசார், அப்பகுதி மக்களுடன் இணைந்து காரின் இடிபாட்டில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இறந்தவர்களின் சடலங்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பெல்காம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com