\
கர்நாடகா: ஜீப்பும்- லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பலி; 3பேர் படுகாயம்

கர்நாடகா: ஜீப்பும்- லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பலி; 3பேர் படுகாயம்

கர்நாடகா: ஜீப்பும்- லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பலி; 3பேர் படுகாயம்
Published on

கர்நாடகாவில் ஜீப்பும்- லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். 3பேர் படுகாயமடைந்தனர்.

17 பேரை ஏற்றிக் கொண்டு ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப், சிந்தாமணி பகுதியில் லாரி மீது மோதியுள்ளது. இதில் ஜீப்பில் பயணித்த ஆறு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com