கோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா?

கோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா?
கோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா?

கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 பேர் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சாம்ராஜ்நகரில் உள்ள கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்தனர். 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து, உணவை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்ததாக 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோயிலை புனரமைப்பதில் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டதில், ஒரு தரப்பினர் பிரசாதத்தில் விஷம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

கோயில் சர்ச்சையில் ஏற்பட்ட முன் பகை காரணமாக, பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டு அதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com