இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா , கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ''கன்னட - மலையாள மக்கள் பரஸ்பரம் ஒற்றுமையாக சகோதரர்கள் போன்று வாழ்கின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு மொழி விஷயத்தில் எப்போதும் பிரச்னை வந்தது இல்லை. இதை நாம் தொடர்ந்து காப்பாற்றி கொண்டு செல்ல வேண்டியது அவசியம்'' என்று எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.