மகாத்மா காந்தி குறித்த காளிச்சரண் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்வினை ஆற்றியுள்ளார். “நீங்கள் என்னை சங்கிலியால் பிணைக்கலாம், என்னை சித்திரவதை செய்யலாம், இந்த உடலை அழிக்கலாம், ஆனால் என் எண்ணங்களை நீங்கள் சிறையில் அடைக்க முடியாது” என்று மகாத்மா காந்தியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.