ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் விடுதலையானார்

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் விடுதலையானார்
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் விடுதலையானார்

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையிலிருந்து இன்று விடுதலையானார். 

கொல்கத்தாவில் நீதிபதியாக பணியாற்றி வந்த கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் சக நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பினார். அத்துடன் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார். இதையடுத்து கர்ணனுக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம், அவரது மனநிலையை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. 

அதற்கு மறுப்பு தெரிவித்த கர்ணன், மீண்டும் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். இதையடுத்து நீதித்துறை மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்த கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே கர்ணன் ஓய்வும் பெற்றார். இந்நிலையில் 6 மாதமாக சிறை தண்டனை முடிந்ததால் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையிலிருந்து இன்று விடுதலையானார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com