'திடீர் கருணை மதிப்பெண் ஏன்?’- நீட் தேர்வு முறைக்கேடு; சரமாரி கேள்வி எழுப்பிய மருத்துவர்கள் அமைப்பு!

நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் பெரும் குளறுபடி இருப்பதாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் இந்திய இளநிலை மருத்துவர்கள் அமைப்பு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வு முறைக்கேடு
நீட் தேர்வு முறைக்கேடுமுகநூல்

நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக விசாரிக்க 4 உறுப்பினர் கொண்ட விசாரணைக்குழுவை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2024-25 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

தேர்வு எழுதியவர்களில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். குறிப்பாக ஒரே மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதும் சர்ச்சையாகி உள்ளது. கடந்த மாதம் நடந்த நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்ட்ரா அரசு வலியுறுத்தியுள்ளது. தேர்வு முடிவுகள் மாநில மாணவர்களுக்கு அநீதியாக அமைந்துள்ளதாக மகாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கண்டனக்குரலை எழுப்பியிருந்தார். இதேபோல கேரளாவில் இருந்தும் எதிர்ப்புக்குரல்கள் வலுத்துள்ளன. இந்நிலையில், குஜராத், சத்தீஷ்கர், ஹரியானா, மேகாலயா மாநிலங்களில் உள்ள ஆறு மையங்களில் தேர்வு எழுதிய1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முறைகேடு செய்த முகமையே விசாரணை நடத்துவது நியாயமல்ல என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க இளநிலை மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியும் வலியுறுத்தியுள்ளது.

நீட் தேர்வு முறைக்கேடு
குளிர்பானம் / பழச்சாறு / காஃபி / டீ அதிகம் குடிப்பீங்களா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்!

இளம் தலைமுறையின் எதிர்காலத்தோடு பாரதிய ஜனதா விளையாடுவதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தனை கண்டனங்களுக்கும், 4 பேர் கொண்ட விசாரணைக்குழு உரிய பதில் தருமா என்று பார்க்கலாம்.

இச்சூழலில், நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் பெரும் குளறுபடி இருப்பதாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் இந்திய இளநிலை மருத்துவர்கள் அமைப்பு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய இளநிலை மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நீட் தேர்வில், 720 மதிப்பெண்ணுக்கு, 718, 719 என்ற மதிப்பெண்கள் நடைமுறை சாத்தியமற்றது. முன்னறிவிப்பின்றி கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறதா?.

நீட் தேர்வு முறைக்கேடு
தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற MPக்களில் அதிக குற்ற வழக்குகளைக் கொண்டவர் யார்? எந்த கட்சிக்கு முதலிடம்?

2024ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் வெளியானதில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?. கருணை மதிப்பெண் வழங்குவது காலவிரயம். அதுகுறித்து முன்னரே அறிவிக்காமல், தேர்வுக்கு பின் அந்த முடிவை எடுத்திருப்பது ஏன்?.

சில மாணவர்களின் மதிப்பெண் பட்டியலும், விடைத்தாள் மதிப்பெண்ணும் பொருந்தவில்லை. 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் வாங்கியதில், பெரும் ஐயம் எழுந்துள்ளது. இயற்கையாக இப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை.” என்று தெரிவித்து ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரே மதிப்பெண் வாங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com