போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்றத்தை நோக்கி நாளை பேரணியாகச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 400 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டிருக்கும் விடுதி கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல மாணவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். எம்.பி.க்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணி செல்ல முடிவு செய்திருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.