“தீய சக்திகளை விரட்டுவதாக கூறி” சிறுமியின் உடலில் தீவைத்து துன்புறுத்திய மந்திரவாதி கைது!

“தீய சக்திகளை விரட்டுவதாக கூறி” சிறுமியின் உடலில் தீவைத்து துன்புறுத்திய மந்திரவாதி கைது!
“தீய சக்திகளை விரட்டுவதாக கூறி” சிறுமியின் உடலில் தீவைத்து துன்புறுத்திய மந்திரவாதி கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் “தீய சக்திகளை விரட்டுவதாக கூறி” சிறுமியை அடித்து, உடலில் தீவைத்து துன்புறுத்திய மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் வசித்து வந்த சிறுமிக்கு “ஹோலி” பண்டிகையை கொண்டாடிய பிறகு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.
சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அதே ஊரில் வசித்து வரும் பேயோட்டும் மந்திரவாதி மௌலானா வாஹித்திடம் அழைத்துச் சென்றுள்ளனர் குடும்பத்தினர். சிறுமியின் உடலில் தீய சக்திகள் புகுந்துள்ளதாக கூறி, தான் பூஜைகள் செய்து அவற்றை விரட்டுவதாக குடும்பத்தை நம்ப வைத்து சிறுமியை தன்னோடு தங்க வைத்துள்ளார்.

அன்று முதல் வாஹித் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். நான்கு நாட்கள் கழித்து குடும்பத்தினர் வந்து சிறுமியை பார்த்தபோது அவளது முகம், உதடுகள் கால்கள் என பட இடங்களில் தீக்காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிறுமியும் இயல்பான மனநிலையில் இல்லாமல் புலம்பியபடியே இருந்ததால் காவல்துறையினரிடம் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அம்மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால், மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் (RIMS) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குடும்பத்தினர் புகாரை அடுத்து தற்போது வாஹித் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி), மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வாஹித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது."தீய ஆவிகளை விரட்டுவதாக கூறி” சிறுமியை அடித்து, தூபக் குச்சிகளால் எரித்து வாஹித் சிறுமியை துன்புறுத்தியுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் ரஞ்சன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com