தேர்தலுக்குத் தயாராகிறதா ஜம்மு - காஷ்மீர்? - பிரதமர் மோடி சந்திப்பின் பின்னணி

தேர்தலுக்குத் தயாராகிறதா ஜம்மு - காஷ்மீர்? - பிரதமர் மோடி சந்திப்பின் பின்னணி
தேர்தலுக்குத் தயாராகிறதா ஜம்மு - காஷ்மீர்? - பிரதமர் மோடி சந்திப்பின் பின்னணி

ஜம்மு - காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திக்க இருக்கும் கூட்டம், இந்திய அரசியலில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்தக் கூட்டம் தொடர்பான விரிவான பின்னணியை காண்போம்.

மெஹபூபா முஃப்தி தலைமையிலான ஜம்மு - காஷ்மீர் அரசு, பாரதிய ஜனதா கட்சியுடன் கொண்டிருந்த உறவுகளை முறித்தையடுத்து 2018-ல் கவிழ்க்கப்பட்டது. அதற்கடுத்த சில மாதங்களில் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு, மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி), உருவாக்கப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்போது, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும், சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தற்போது ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதைத் தொடர்ந்து, மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது குறித்தும், சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்தும், மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, புதுடெல்லி மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜம்மு - காஷ்மீர் பற்றி புதிய சலசலப்பு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் ஜூன் 24 அன்று ஜம்மு - காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தவுள்ளார். இதற்காக ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த 14 தலைவர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அழைப்பில் முன்னாள் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளனர். பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு நிகழ்ச்சியானது, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசியல் செயல்முறைகளை வலுப்படுத்தும் வகையில் அமையும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதை வைத்துதான் ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்தும், மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கேற்ப, ஜம்மு - காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, 'டைம்ஸ் ஆப் இந்தியா'-வுக்கு அளித்த பேட்டியில், ``ஜம்மு - காஷ்மீரில் தேர்தல்கள் டிலிமிட்டேஷனுக்குப் பிறகு நடைபெறும்" என்றுள்ளார். டிலிமிட்டேஷன் என்பது பல்வேறு அமைப்புகளுக்கு தேர்தலுக்கான தற்போதைய தொகுதிகளின் பிராந்திய எல்லைகளை மறுசீரமைக்கும் செயல்முறையாகும்.

ஜம்மு - காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒரு டிலிமிட்டேஷன் கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி (ஓய்வு பெற்ற) ரஞ்சனா தேசாய் தலைமையில், டிலிமிட்டேஷன் கமிஷனுக்கு மார்ச் மாதத்தில் ஒரு வருடம் நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி, தொகுதிகளின் பிராந்திய எல்லைகளை மறுசீரமைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. இந்த வாரம் ஜம்மு - காஷ்மீர் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பில் தொகுதிகளை வரையறுப்பது முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீர் சட்டசபை:

ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓ.கே)-இன் கீழ் வரும் 24 இடங்கள் உட்பட, மத்தியப் பிரதேசத்தில் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை 107 முதல் 114 ஆக உயர்த்தியது. இதற்கிடையே, வரவிருக்கும் தேர்தலில், ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட வலிமை 83-ல் இருந்து 90 ஆக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதுபோக, ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்திற்கு 24 உறுப்பினர்களை நியமன உறுப்பினர்களை அரசாங்கம் தேர்வு செய்யலாம் என்று மற்றொரு ஊகங்கள் உள்ளன. இந்த 24 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓ.கே) இன் கீழ் வரும் இடங்கள் ஆகும்.

இதற்கிடையேதான் பிரதமர் மோடி உட்பட மத்திய அரசைச் சேர்ந்தவர்கள் ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும் என்றும், சரியான நேரத்தில் மாநில நிலை மீட்டெடுக்கப்படும் என்றும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த கூற்றுக்கு ஏற்ப, ஜூன் 24-ல் நடக்கும் பிரதமர் மோடி உடனான கூட்டம் அதன் தொடக்கமாக அமையும் எனக் கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக, ஜம்மு - காஷ்மீர் உள்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசாங்கமும் இல்லாமல் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் உள்ளது.

மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) மற்றும் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளால் தீவிர செயல்பாடுகள் இல்லாமல் பணிகள் முடங்கி கிடக்கின்றன. இந்தப் பின்னணிக்கு இடையேதான் பிரதமர் மோடியின் அரசியல் தலைவர்களுடனான முதல் சந்திப்பு ஜம்மு - காஷ்மீரில் ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கான எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. இந்த சந்திப்பில் தேர்தல் நடத்தப்படும் முடிவுகள் எடுக்கப்பட்டால் 2022 பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்துடன் ஜம்மு - காஷ்மீருக்கும் தேர்தல் நடக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com