காஷ்மீரில் ஒரே நாளில் 2 என்கவுண்ட்டர்கள்

காஷ்மீரில் ஒரே நாளில் 2 என்கவுண்ட்டர்கள்
காஷ்மீரில் ஒரே நாளில் 2 என்கவுண்ட்டர்கள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய 2 என்கவுன்ட்டர்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் புல்வாமா மற்றும் பட்காம் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் 2 என்கவுன்ட்டர்களை நடத்தினர். இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதி ஜாகித் வானி, பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பயங்கரவாதி உட்பட 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல் துறை இயக்குநர் விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகளை வேட்டையாடி அழிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் கூறினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com