`ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவும்’- டெல்லி காவல்துறை சம்மன்

`ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவும்’- டெல்லி காவல்துறை சம்மன்

`ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவும்’- டெல்லி காவல்துறை சம்மன்
Published on

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்காக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜரானார். இந்த நிலையில் இந்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி காவல்துறையினர், ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com