சக வீரர்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர் !

சக வீரர்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர் !
சக வீரர்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர் !

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்பு படை முகாமில், 5 வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீரர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சத்தீஸ்கர் மாநிலம், கேதனார் கிராமத்தில் இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்பு படையின் 45-வது பட்டாலியன் அமைத்துள்ளது. இங்கு பணியாற்றி வந்த மசுதுல் ரஹ்மான் என்ற வீரர் இன்று காலை திடீரென, தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் சக வீரர்களை சரமாரியாக சுட்டார். இதில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஒருவர் உயிரிழந்தார். 

இந்நிலையில், ரஹ்மானும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ரஹ்மானை பிற வீரர்கள் சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஹ்மான் எதற்காக வீரர்களை எதற்காக சுட்டுக் கொன்றார் என்ற விவரம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. விடுமுறை அளிக்காத நிலையில், மன அழுத்தத்தில் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படும் நிலையில், உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com