விண்ணில் எப்போது பாய்கிறது சந்திராயன் - 3? இஸ்ரோ வெளியிட்ட தகவல்!

ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தெற்கு பகுதியை சந்திராயன் -3 அடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோ
இஸ்ரோ கோப்பு படம்

நிலவின் தென் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான், கடந்த 2019-ல் செயல்படுத்தப்பட்டது. அப்போது 2019 செப்டம்பர் மாதத்தில் சந்திரயான் லேண்டெர் நிலவின் மேற்பகுதியை நெருங்கும்போது திடீரென செயலிழந்தது.

இஸ்ரோ
இஸ்ரோ pt desk

இந்நிலையில் அடுத்தகட்ட சந்திரயான் திட்டத்தை செயல்படுத்தி, செயற்கைக்கோளை விண்ணில் அனுப்புவதற்கான முயற்சியில் இஸ்ரோ ஆய்வாளர்கள் இறங்கினர். அதன்படி சந்திராயன்-2 திட்டத்தின் ஆர்ப்பிட்டர் இன்னும் நிலவை சுற்றி வரும் நிலையில், அதை மூன்றாவது கட்ட திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளனர் ஆய்வாளர்கள்.

அதன்படி சந்திராயன் - 3 விண்கலம் ஏவுதலின் போது அது எதிர்கொள்ளும் கடுமையான அதிர்வுகள், ஒலி சூழலை தாங்கும் திறன் போன்றவை பற்றிய அத்தியாவசிய சோதனைகள் முடிவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து சந்திரயன் 3-ஐ விண்ணில் ஏவுவதற்கான தேதியை இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுபற்றி இஸ்ரோவின் ராக்கெட் வடிவமைப்பு மற்றும் ஏவுதல் இயக்குனர் வெங்கட்ராமன் பேசுகையில், “சந்திரயான் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜிஎஸ்எல்வி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்தார். மேலும் சந்திராயன் -3 ஏவுகலம் ஜூலை 12 அன்று விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தெற்கு பகுதியை அடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com