\
'5 கட்ட சோதனைக்குப் பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்படும்' - இஸ்ரோ தலைவர் சோமநாத்

'5 கட்ட சோதனைக்குப் பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்படும்' - இஸ்ரோ தலைவர் சோமநாத்

'5 கட்ட சோதனைக்குப் பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்படும்' - இஸ்ரோ தலைவர் சோமநாத்
Published on

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் விண்வெளிப் பயணத் திட்டம் 'ககன்யான்'  ஐந்து  கட்ட ஆளில்லா சோதனைக்குப் பின் மனிதனுடன் விண்ணுக்கு செல்லும்'' எனக் கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சோமநாத்.  

மூன்று செயற்கைக் கோள்களை தாங்கியபடி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத் , ''விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 3 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன. இஸ்ரோவின் விண்வெளிப் பயணத் திட்டமான 'ககன்யான், 5 கட்ட ஆளில்லா சோதனைக்குப் பின் மனிதனுடன் விண்ணுக்கு செல்லும். கடந்த 2 ஆண்டுகளாக செயற்கைக்கோள் ஏவுதல் சரக்குகளை கையாளுதல் தடைப்பட்டதால் காலதாமதம் ஆனது.

சூரியனை ஆராயும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. சந்திராயன் 3 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். GSLV mak 3 செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் தொடங்கும். குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதல் மையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி'' எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: ஆண்கள் கழிவறையில் டையப்பர் ஸ்டேஷன்: பெண்களின் பாராட்டை பெற்ற பெங்களூரு ஏர்போர்ட் நிர்வாகம்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com