காடுகளில் மறைந்துவாழ வீரப்பன் வரலாறை படித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்..!

காடுகளில் மறைந்துவாழ வீரப்பன் வரலாறை படித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்..!
காடுகளில் மறைந்துவாழ வீரப்பன் வரலாறை படித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்..!

தென்னிந்தியாவின் காட்டுப்பகுதிகளில் மறைந்து வாழ்வதற்காக ஐ.எஸ் தீவிரவாதிகள், வீரப்பனின் வரலாறை படித்துள்ளனர் என்ற தகவல் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, கேரளாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆதரவாக தென்மாநிலங்களில் ’அல்ஹிந்த்’ என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்க திட்டமிட்டது தெரியவந்தது. தென்னிந்திய வனப்பகுதிகளில் இந்த அமைப்புக்காக தனி மாகாணத்தை ஏற்படுத்துவதற்கான இடத்தினை தேர்வுசெய்ய 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் பல வனப்பகுதிகளில் சுற்றியுள்ளனர். அப்போது கூடாரங்கள், ஏணிகள், வில் அம்புகள், கத்தி, காலணிகள் போன்றவற்றையும் அவர்கள் எடுத்து சென்றுள்ளனர். நாட்டின் பல்வேறு தலைவர்களை கொல்ல திட்டமிட்ட இவர்கள் அதன்பின் காடுகளுக்குள் தப்பி செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக பல ஆண்டுகளாக காடுகளில் பதுங்கி தனி சாம்ராஜ்ஜியத்தை நடத்திவந்த வீரப்பனின் வாழ்க்கை வரலாறு தொடர்புடைய புத்தகங்களை தேடி சேகரித்து படித்துள்ளனர். இந்த தகவல்களை குற்றப்பத்திரிகையில் விவரித்திருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com