“வீரர்கள் உயிர் வீணானது; கண்டிப்போடு கையாள வேண்டும்” - ஜக்கி வாசுதேவ்

“வீரர்கள் உயிர் வீணானது; கண்டிப்போடு கையாள வேண்டும்” - ஜக்கி வாசுதேவ்
“வீரர்கள் உயிர் வீணானது; கண்டிப்போடு கையாள வேண்டும்” - ஜக்கி வாசுதேவ்

வீரம் நிறைந்த நம் படைவீரர்களின் உயிர் வீணாக்கப்பட்டது என ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் உயிரிழந்தது தொடர்பாக கருத்து தெரிவித்து ஜக்கி வாசுதேவ், “வீரம் நிறைந்த நம் படைவீரர்களின் உயிர் வீணாக்கப்பட்டது. இதுபோன்ற கோழைத்தனமான செயல் செய்வோரை உறுதியோடும் கண்டிப்போடும் கையாள வேண்டும். முடிவெடுப்பதில் உள்ள குறைபாட்டினால் நம் நாடு பெரும் விலை கொடுத்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜம்மு - காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இந்திய உட்பட உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உட்பட உலக நாடுகள் பலவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட அனைத்து தலைவர்களும் இரங்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அத்துடன் அனைவருமே உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com