பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமா? - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமா? - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமா? - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் இயற்றிய சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சட்டங்கள் இயற்றியுள்ளன. சில மாநிலங்கள் பிச்சை எடுப்பதற்கு சிறை தண்டனையும், அபராதங்களும் விதித்துள்ளன. குறிப்பாக பேருந்துகள், ரயில்நிலையங்கள் போன்ற இடங்களில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இது அவர்களின் விருப்பத்தின்பேரில் செய்யவில்லை. அவர்கள் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால் இதை செய்கிறார்கள். எனவே இதை கிரிமினல் குற்றமாக கருதுவது அவர்களுக்கு மேலும் அழுத்தம் தரக்கூடிய விஷயமாக மாறிவிடும் எனக்கூறி பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்படும் எனவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அனைத்தும் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் ஆகாது என 2018ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com