ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணைக்காக இன்று ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேடாக அன்னியச் செலாவணி பெற்றது தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். மீண்டும் வரும் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னியச் செலாவணியை முதலீடாக பெற சட்ட விரோதமாக உதவிய புகாரில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து ஐஎன்எக்ஸ் வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும், அனுப்பிய சம்மன்களையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com