கைதாகிறாரா ப.சிதம்பரம் ? - வீட்டிற்கு விரைந்த சிபிஐ

கைதாகிறாரா ப.சிதம்பரம் ? - வீட்டிற்கு விரைந்த சிபிஐ

கைதாகிறாரா ப.சிதம்பரம் ? - வீட்டிற்கு விரைந்த சிபிஐ
Published on

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய வாய்ப்புள்ளது.

முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கடந்த ஆண்டு  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் இதன் மீதான உத்தரவை பிறப்பிக்காமல் கடந்த ஜனவரி 25ம் தேதி வழக்கை ஒத்திவைத்தது. இந்த மனு மீதான வாதங்களின்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடத்திய விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என இரண்டு அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன. 

கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகின்றது. இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

இந்த நிலையில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். அத்துடன் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அவரையும் கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சிதம்பரம் வீட்டில் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கிடையே ப.சிதம்பரம் தரப்பிற்கு மேல்முறையீடு செய்ய டெல்லி உயர்நீதிமன்ற 3 நாட்கள் அவகாசம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com