செங்கோலை, மவுண்ட்பேட்டன் பிரபு, நேருவிடம் கொடுத்தாரா? நடந்தது என்ன? - பத்திரிகையாளர் N.ராம் விளக்கம்

1947இல் திருவாவடுதுறை ஆதீனம் அளித்த செங்கோலை, மவுண்ட்பேட்டன் பிரபு, நேருவிடம் கொடுத்தாரா என்பது குறித்து தி இந்து குழும இயக்குநர் என்.ராம் தெரிவித்துள்ள கருத்துகளை இங்கு பார்ப்போம்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா, நாளை நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவைத் துணைத்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். காலை எட்டரை முதல் 9 மணிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் செங்கோல் வைக்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ள நிலையில், 1947இல் திருவாவடுதுறை ஆதினம் அளித்த செங்கோலை, மவுண்ட்பேட்டன் பிரபு, நேருவிடம் கொடுத்தாரா என்பது பற்றி 'தி இந்து' குழும இயக்குநர் என்.ராம் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியை இங்கு பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com