உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை: நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை: நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை: நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் மிக எளிமையானதும், புதுமையானதுமான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை எளிதாகவும், விரைவாகவும், சவுகரியமாகவும், சிக்கனமாகவும் உள்ளது.

இதில் 3 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதால், கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிளுக்கு இந்த பரிசோதனை பொருத்தமாக இருக்கும்.

இது குறித்து சுற்றுச்சூழல் வைராலஜி பிரிவு மூத்த விஞ்ஞானி டாக்டர் கிருஷ்ணா கையர்னர் அளித்த பேட்டியில், "சளி பரிசோதனை முறைக்கு நேரம் ஆகிறது. மேலும் மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சளி மாதிரிகளை சேகரிக்க வேண்டியுள்ளதால், இது நோயாளிகளுக்கு சற்று அசவுகரியமாகவும் உள்ளது. இதை பரிசோதனை மையத்துக்கு கொண்டு செல்ல நேரம் ஆகிறது.

வாய் கொப்பளித்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை நோயாளிகளுக்கு எளிதாக உள்ளது. அத்துடன், முடிவுகளை 3 மணி நேரத்தில் அறிய முடியும்" என்றார்.

நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், ஆய்வுக்கூட உதவியாளர்கள் அனைவரும், நோயாளிகளிகளுக்கு எளிமையான முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வழியை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றை முதல் நிலையிலேயே, அதிவிரைவாக கண்டறிய இந்த பரிசோதனை உதவும் என்பதால், நாடு முழுவதும் இந்த பரிசோதனை முறையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டுமென மருத்துவர் கையர்னரின் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com