இமாச்சலப் பிரதேசத்தில் 18 ஆயிரம் அடி உயர பனிச் சிகரத்தில் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மலையேற்ற வீரரை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
18, 570 அடி உயரத்தில் சிக்கியிருந்த மலையேற்ற வீரரை, 18 கிலோ மீட்டர் தூரம் வரை இந்தோ திபெத் எல்லை படையினர் சுமந்து வந்தனர். முழு மலைப் பாதையும் மிகுந்த சவாலாக இருந்த நிலையில், மலையேற்ற வீரரை பத்திரமாக அடிவாரத்திற்கு அழைத்துவந்த படையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.