இலங்கை புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்தார் இந்திய தூதர்

இலங்கை புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்தார் இந்திய தூதர்
இலங்கை புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்தார் இந்திய தூதர்

இலங்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே நேரில் சந்தித்து பேசினார்.

ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவுடனே இந்திய தூதர் கோபால் பாக்லே அவரை சந்திந்து பேசியதாகவும், ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த முதல் வெளிநாட்டு தூதர் அவர்தான் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்தும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாகத் தெரிகிறது. முன்னதாக பிரதமராக பதவியேற்ற பின்னர் பேசிய ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவுடன் தொடர்புகளை வலுப்படுத்த விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திவிட்டதாக வெளியான தகவல்களை இந்திய தூதரகம் மறுத்துள்ளது. விசா வழங்கும் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைக்கு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com