மொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்

மொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்

மொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்
Published on

நாட்டில் உள்ள பாதி விவசாய குடும்பங்களின் வருமானம், கடன்களை திரும்ப செலுத்ததான் போதுமானதாக இருக்கிறது என நபார்டு வங்கி ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

2016-2017ஆம் ஆண்டுக்கென கிராமப்புறங்களில் நபார்டு வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 52.5% விவசாய குடும்பங்கள், கடனில் தத்தளிப்பது தெரிய வந்துள்ளது. சராசரியாக ஒரு விவசாய குடும்பம், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 602 ரூபாய் கடன் வைத்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் ஆண்டு வருமானம் என்பது, சராசரியாக ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. 

குறிப்பாக இரண்டு ஹெக்டேருக்கு அதிகமாக நிலங்கள் வைத்திருக்கும் 60% விவசாய குடும்பங்கள் கடனில் உள்ளன. தெலங்கானாவில் 79%, ஆந்திராவில் 77%, கர்நாடகாவில் 74% விவசாய குடும்பங்கள் கடனில் சிக்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 60%, கேரளாவில் 56%, ஒடிசாவில் 54% விவசாய குடும்பங்களும் கடனில் தத்தளிப்பது தெரியவந்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com