இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீனப் படைகள் - தடுத்து நிறுத்திய இந்தியப் படைகள்

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீனப் படைகள் - தடுத்து நிறுத்திய இந்தியப் படைகள்
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீனப் படைகள் - தடுத்து நிறுத்திய இந்தியப் படைகள்

இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்றபோது மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய தவாங் பகுதியில் இந்த மோதல் சில மணி நேரங்கள் நீடித்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. சீனப் படைகளை இந்தியப் படைகள் தடுத்து நிறுத்தியதாகவும் இதன்பின் இரு தரப்பிலும் உள்ளூர் படைத் தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மோதல் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரு தரப்பிலும் எந்த சேதமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் பகுதி எல்லை பிரச்னைக்கு தீர்வு காண இந்திய- சீன உயர்நிலை பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இம்மோதல் நடந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா - சீனா எல்லையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பதற்றநிலை நீடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com