அசத்தும் 'சிப்பிப்பாறை'... ராணுவப் பயிற்சியுடன் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்கள்!

அசத்தும் 'சிப்பிப்பாறை'... ராணுவப் பயிற்சியுடன் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்கள்!
அசத்தும் 'சிப்பிப்பாறை'... ராணுவப் பயிற்சியுடன் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்கள்!

மோப்ப சக்தி மூலம் கொரோனா நோய் தொற்றை கண்டறியும் வகையில் நாய்களுக்கு இந்திய ராணுவும் பயிற்சியளித்து வருகிறது.

இந்திய ராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்டுள்ள சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் வகை நாய்கள், சிறுநீர் மற்றும் வியர்வை மாதிரிகளை வைத்து கொரோனா தொற்றை கண்டறிந்து வருகிறது.

இதுவரை இந்த நாய்கள் 3,800 மாதிரிகளை பரிசோதித்து 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் காக்கர் ஸ்பேனியல் வகை நாய்க்கு கேஸ்பர் என்றும், சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த நாய்க்கு ஜெயா என்றும் பெயர் வைத்துள்ளனர்.

இந்த நாய்களுடன் விரைவில் மணி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள மற்றொரு சிப்பிப்பாறையும் கொரோனாவை கண்டறிய தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நாய்கள் மூலம் பொது இடங்கள் மற்றும் முக்கியப் பகுதிகளில் ஆர்டி பிசிடிஆர் உதவி இல்லாமல் விரைவில் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு உதவவியாக இருக்கும். இந்த நாய்கள் இப்போது சண்டிகர் ராணுவ முகாமில் இருக்கிறது. பின்பு இவை லடாக் மற்றும் காஷ்மீர் பகுதியில் பணியமர்த்தப்பட இருக்கிறது.

இது குறித்து இந்திய ராணுவத்தின் கால்நடைப் பிரிவு அதிகாரி கர்னல் சுரீந்தர் சைனி கூறும்போது "கொரோனாவை கண்டறியும் வகையில் இப்போது 8 நாய்களுக்கு பயிற்சி பெற்று வருகிறது. விரைவில் இவைகளுடன் மொத்தம் 10 நாய்கள் பரிசோதனை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும். பொதுவாக இவற்றுக்கு பயிற்சி கொடுக்க 36 வாரங்கள் ஆகும். ஆனால் நாங்கள் இப்போது இருக்கும் சூழலுக்காக 16 வாரங்களில் நாய்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்" என்றார்.

இந்தியாவை பேன்று பிரிட்டன், பின்லாந்து, ரஷ்யா, பிரான்ஸ், அமீரகம், ஜெர்மனி, லெபனான் ஆகிய நாடுகளில் ஏற்கெனவே மோப்ப நாய்களை கொண்டு விமான நிலையம், ரயில் நிலையங்களில் நாய்களை வைத்து கொரோனா கண்டறியும் முறை நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com